எஸ்.ரி. எஸ்.இணையவாசகர்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

தமிழர்களின் பண்பாட்டில் தனித்துவ வகிக்கும் மிக உன்னதமான திருநாளான சித்திரை புத்தாண்டு மலர இருக்கிறது.
மகிழ்ச்சி,துக்கம்,சாதனை,சோதனை,வேதனை,கோபம்,போட்டி,பொறாமை,ஏமாற்றம்,ஏக்கம்,இழப்பு என எண்ணற்ற உணர்வுகளாலும்,நிகழ்வுகளாலும் கட்டப்பட்ட 365 நாட்கள் முடிவுக்கு வருகிறது. திரும்பிப்பார்த்தால் நினைத்துப் பார்க்க ஆயிரக்கணக்கான நினைவலைகள். அந்தவகையில் இன்று 13.04.2017 வியாழக்கிழமை நள்ளிரவு 12.48 மணிக்கு ஏவிளம்பி என்னும் புதுவருடம் மலர இருக்கிறது. 60 ஆண்டுகளைக் கொண்ட பஞ்சாங்கம் சித்திரை மாதம் 1 ஆம் நாளை கொண்டுதான் கணிக்கப்படுகிறது. அதில் உள்ள வருடங்களில் துர்முகி என்ற வருடம் முடிந்து புதிய எதிர்பார்ப்புகளை கொண்டு மங்களகரமான திருநாளான சித்திரைப் புதுவருடம் ஏவிளம்பி அனைவருக்கும் இன்பமான வருடமாய் அமைய வாழ்த்துக்கள்