ஏதிலிகளாம்!கவிஞர் தயாநிதி

 

கேளடா
கவிஞா இன்று
ஏதிலிகள்
தினமாமடா…
எத்தனை பேர்
இதன் பொருளறிவர்
எழதடா….

இன்று உன்
கவிதைக்கு கரு
ஏதிலிகள் தானடா.
ஏதிலிகள் எங்களுக்கு
உறைக்கட்டும்
உணரட்டும்.
விழிக்கட்டும்..

மனித பிறப்புக்கும்
இறப்புக்கும் .இடையில்
நம் வாழ்க்கைக்கும்
அர்த்தங்கள் உண்டடா
அதனை என்னவென்றுன்
எழுத்தாணி கொண்டு
கிறுக்கடா..

வெறும் காதலையும்
தினம் மோதலையும்
அவர் சாதலையும்
கிறுக்கியுன் காலத்தில்
கிறுக்கனாகாதே..
சறுக்காமல் வாழும்
வழிகளை நறுக்காக
படை. படியட்டும்…

மோகத்தையும்
காமத்தையும்
கோபத்தையும்
சாபத்தையும் கொட்டிக்
குலையாதே….
தமிழன் தாகத்தையும்
அவன் விரத்தையும்
இன்றைய காலத்தின்
தேவைகளையும் பதியடா
பகை விரட்ட பாக்களை
வடியடா. படியும் வரை
படியடா.நாங்கள் ஏதிலிகள்
எனும் பதம் உடையட்டும்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி