ஏமாற்றம்

இளகிய மனம்கண்டு
ஏய்த்துப் பிழைக்க
சிலருண்டு
அறியாத
என் மனம்
ஏமாந்து நின்றது
பேசுவதெல்லாம்
உண்மையென நம்பியதால்
உள்ளம் அழுகிறது
யாரும் இல்லாத
தேசம் வேண்டும்
பொய்கள் இல்லாத
மனிதர்கள் வேண்டும்
பசுமை மட்டுமே
பார்த்துரசிக்க வேண்டும்
கவலைகள் தீர
தனிமையில் அழுது முடிக்க வேண்டும்
உயிர் என்றும்
உறவேன்று சொன்னவர்கள் கூட
உண்மையில்லாத நிலைகண்டு
உயிர் பிரியும் வலியுணர்ந்தேன்
இதயம் முழுக்க பாரம்
எங்கே இறக்கி வைக்க
எல்லாப் பக்கங்களும்
ஏமாற்றுக்காரர்கள்
கூரையென வானமும்
சுவர்களென மரங்களும்
துணைகளென பறவைகளும்
தீங்கில்லாத வாழ்க்கை
விரக்தி மட்டுமே
என்னில் முழுவதுமாய்
எங்கும் எதிலும்
பொய்யும் போலியும்
வேண்டாம்
யாரும் வேண்டாம்
எதுவும் வேண்டாம்
என்னை விட்டால்
நான் வாழ்வேன்
சில காலமென்றாலும்
உயிரோடு….
நம்பிக்கை வைத்த
இதயம் கூட
என்னை தவிக்கவைத்த போது
எல்லாம் வெறுத்தேன்
என் உயிரைக் கூட
துறக்க நினைத்தேன்
மரணம் மட்டுமே
முடிவென்றுணர்ந்தேன்
பாசங்கள் எல்லாம்
வெளி வேஷங்களே
அன்பு என்பது
தேவைக்கு மட்டுமே
வேண்டாம்
போதும் என்கிறது
என் கண்ணீர்
முடிவுக்கு வர நினைக்கிறது
வென்று விட்டேன்
இந்த உலகில்
புரிந்து கொண்டேன்
மனித மனங்களை…
நானே……….
ஜெசுதா_யோ