ஏறு நடைபோடு எதிர்காலம் உன்கையில்

தோல்வியில் கலங்காதே
மௌனமாய் இரு.
சுமைகளை இறக்காதே
பாடமாய் எடு.
எதிர்ப்புக் கண்டு
மலைப்புக்கொள்ளாதே.
எறிக்கின்ற கதிரவன்
இருளுக்கே பகைவன்.
உனக்கல்ல இழுக்கு
உரத்துச் சிந்தித்தால்
உலகம் உனதாகும்.
ஏறு நடைபோடு
எதிர்காலம் உன்கையில்

ஆக்கம் கவிஞர் முகில்வாணன்
கருவான திகதி 23.07.2021 உருவான நேரம் காலை21.45 மணி