ஏலம்.

கூறு
போட
ஆரம்பம்.
தரையை
கூறு போட்டவன்
உயிரை
விலையாக்கினான்..
மண்ணையும்
மலையையும்
சுரண்டி விற்றவன்
விண்ணையும்
விட்டபாடில்லை..
கண்களை
விற்று சித்திரம்
வாங்கும் மன
பாங்குடையவன் மனிதன்.
பேராசை
நீள நிலவையும்
தனதாக்க
போராடுறான்..
அழிவை
நோக்கி நகரும்
நாகரீகம்
நாஷாவில்
ஆரம்பம்..
சந்திரனில்
எந்திரப் போர்
தந்திரமாகவே
ஏலம் நடக்கின்றது.

ஆ;கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி