** ஓடிவந்து கட்டிக்கொள்**

மனமே எந்தன் மனதின்மனமே, உந்தன்,
மலர்ந்தும் விரியாதுபோன நினைவுகளை,
மாலையாகக் கோர்த்தெடுத்து, காதலோடு
மடலொன்றில் பக்குவமாய்ப்பதித்தேடுத்து,
மங்கையவளின் பாதகமலங்களுக்கு
மனமுருகி நானும் அனுப்பிவைத்தேன்.
மாதங்கள்தான் கழிந்துபோயின, அவள்
மனம்மட்டுமேனோ கனியவில்லைஇன்னும்.
மாதுளம் கனிந்து என்னிடம் வருவாயென்னும்,
மயக்கத்தில் நானும் பார்த்திருந்தேன் மானே ,
மலரும் ஓர்நாள் அவளிதயமென நானே
மண்டலங்களாய் காத்துக்கிடந்தேன் வீணே .
மரணம்தான் எனைத்தேடி வாசல்வரை வந்தது.
மறக்கமுடியாத உன்நினைவை எண்ணியபடியே.
மரணப்படுக்கையிலும் காத்திருக்கிறேனடி கிளியே.
மன்றாட்டமாயுன்னிடம் ஒன்றுமட்டும் கேட்கிறேன் .
மறுபடியும் பூமியிலே நான் மனிதனாய்ப்பிறந்தால்,
மறக்காமல் உன்னைத்தேடிவந்து காதலிப்பேன்
மறுக்காமல் நீயுமென்னை ஓடிவந்து கட்டிக்கொள்.
மதுளநேசன்