ஓரப் பார்வை தந்த ஒய்யாரி

ஒற்றை பார்வை தந்தவளே!! உன்
ஓரப் பார்வைக்கு உலகே விலையடி.
ஓராயிரம் பார்வைகள் பட்டது என்மேல்
ஒன்று கூடப்பதியவில்லை மனம்மேல்.
ஒருக்களித்து நீயென் முன்னால் வராது,
ஒழிந்தொழிந்து பின்னே நின்றுமே,
ஒளிவீசும் கண்களால் தந்த அந்த,
ஒய்யாரப் பார்வை தானடி என்னுள்
ஒளிப்படமாய் பதிந்து போய்க்கிடக்கிறது.
ஒருநாள் இல்லை ஒருநாள் ,மீண்டும்
ஒருமுறையேனும் ,அதே கண்களை
ஒருதடவை காணவேண்டும் கண்ணே .
ஒளி நேசன் .