ஓ காலமே…..


கால் நூற்றாண்டாய்
காலம் சிறைப்பிடித்த
வீரத் தமிழரின் வரலாற்றை
கொன்று குவித்து
முள்ளிவாய்க்கால் என
முற்றுப்புள்ளியிட்டு
ஏற்க முடியாத
முடிவுரை எழுதிய நாளை
எப்படி மறப்பது??
அழுது துயரோடு
உருக்குலைந்து போகும்
எம் உறவுகளுக்காய்
தொலைவில் இருந்து
துக்குறுகின்றோம்….

சுபாரஞ்சன்