ஓ பெண்ணே..!


உன்
கண்கள் செய்கின்றன
வலிந்த தாக்குதல்கள்.
உன்
உதட்டோர புன்னகை
ஏவுகணையாகின்றது.
உன்
போர் வியூகம்
அழகான போர் முனைப்பு.
உன்
சுற்றி வளைப்பு
எதிர்பாராத முற்றுகை.
உன்
நாணமெனும் முன்னரங்க
காவலரன் தூளானது.
உன்
அறை கூவலை
ஆண்மை ஏற்றுக்கொண்டது.
உடையாத
பொறுமைக் கோட்டை
தகர்ந்து போனது.
களத்தில்
சமர் வெற்றி தோல்வியின்றி
கை குலுக்கி
சமரசமானது.

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி