கடந்து போகும்..!

காலத்தின்
கண்ணாடிகள்.
கை எடுத்து
வணங்கிய
தெய்வங்கள்..!
கல்வி செல்வம்
வீரம் அனைத்துக்கும்
அருள் கடவுளர்..
அம்மனாய்
பத்திரகாளியாய்
பணியாற்றும்
காவல் தெய்வங்கள்.,!
தற்காப்புக் கலையின்
தாரகைகள்.
சண்டி ராணிக்கள்.
தேசம் காக்க புயலாய்
புறப்பட்ட வேலு நாச்சியர்கள்.
முறம் கொண்டு
புலி விரட்டிய கோதைகள்…!
காலம் கடந்து
போனது.. வீட்டுக்குள்
பூட்டப் பட்டனர்.
அடுக்களைக்குள்
அடக்கப் பட்டனர்.
ஒடுக்கப் பட்டனர்.
இயந்திரமாகினர்…
அதுவும் கடந்து போனது.
ஈழ விடுதலைப் போர்
வெளிச்சம் போட்டது.
கரங்களில் சுடு கலன்கள்.
தேசியப் போரின்
பங்காளிகளாயினர்.
உலகம் விஜர்ந்தது
உன்னதம் பெற்றனர்..!
போற்றுவோம்…

ஆக்கம் கவிஞர் ரி.தயாநிதி