கடவுள்…

மானுடம்
நேசிக்கும்
மானுடா….

நீயின்றி
எண் சாண்
உடம்பு
எங்களுக்கு
ஏதடா…

சேற்றிலே
உன் பாதம்
நனைவதால்
எம் வயிற்றுக்கு
அன்றாட சாதம்…

உன் வாழ்வு
வரப்போடு
துணைவியரோ
அடுப்போடு…
பிள்ளைகளோ
வயலோடு..

கூடாரம்
ஏதுமில்லை
ஆனாலும்
ஆதாரம்
வெய்யிலும்
மழையுமன்றோ..

இயற்கையே
உன் கடவுள்
எமக்கு நீயே
உயிர் கடவுள்…

தயாநிதி