கனடா கவிஞர் மணிமேகலை கைலைவாசனின் இரு நூல்கள் வெளியீடு

இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக இன்று 01/03/2020 சென்னையில் வடபழனி மேப்பில் டிரி உணவகத்தில் கவிஞர் மணிமேகலை கைலைவாசனின் „எழுதுகோல் பேசுகிறேன்“ „ஒரு மழை நாளும் சில தூறல்களும் “ இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டது

பேராசிரியர் கி சுமதி தலைமையில் வெளியிடப்பட்ட இரண்டு நூல்களையும் தொழிலதிபர்கள் எம்.சாதிக் பாட்சா கே.எம் இராேஜந்திரன் ஆகியோர் முதல் பிரதிகளைப் பெற்றுக் கொண்டனர்

கவிஞர் பா.தென்றல் , கோபி கண்ணதாசன் புருசோத்தமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க கவிஞர் சொர்ணபாரதியும் , கவிஞர் பாரதி பத்மாவதியும் நூல் குறித்து ஆய்வுரை வழங்கினர் .பேராசிரியர் நளினிதேவி கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் இருவரும் சிறப்பு விருந்தினர்ர்களாகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்
முன்னதாக பிரேமா கார்த்திகேயன் அனைவரையும் வரவேற்க மணிமேகலை கைலைவாசன் ஏற்புரையாற்றி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்

விழாவில் மணிமேகலை கைலைவாசனின் இலக்கியப் பணியைப் பாராட்டி நந்தவனம் பவுண்டேசன் வழங்கும் „மாண்புறு தமிழர்“விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார் . மேலும் இன்று விழாவில் விற்பனையான நூல்களின் தொகை முழுவது பாலசந்திரன் என்ற மாற்றுத்திறனாளிக்கு உதவியத் தொகையாக மேடையில் வழங்கப்பட்டது