கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளன.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் தனது 25வது ஆ;ணடு நிறைவை முன்னிட்டு உலகெங்கும் வாழும் எழுத்தாளர்கள் மத்தியில் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் பரிசுக் கதைகள் இன்று காலை கனடாவில் ஸ்காபுறோ நகரில் சந்தித்த சிறுகதைப் போட்டிக்கான குழு பரிசு பெற்ற கதைகளை தெரிவு செய்தது.

போட்டிக்காக உலகின் பல நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர் சுமார் முந்நூறு பேர் தமது படைப்புக்களை அனுப்பியிருந்தனர்.
பரிசுக் கதைகளை தேர்ந்தெடுக்கும் முதற்சுற்றில் எழுத்தாளர்கள் “ சிந்தனைப் பூக்கள்“ பத்மநாதன், எழுத்தாளரும் இணையத்தின் பொருளாளருமாக திரு க. ரவீந்திரநாதன், எழுத்தாளரும் இணையத்தின் செயற்குழு உறுப்பினருமான திருமதி சிவநயனி முகுந்தன் ஆகியோர் அனைத்துக் கதைகளையும் வாசித்து அவ்றறிலிருந்து 21 சிறுகதைகளை தேர்ந்தெடுத்தனர்

பின்னர் அவற்றை எழுத்தாளர் இணையத்தின் தலைவரும் எழுத்தாளருமான திரு குரு அரவிந்தன், மற்றும் எழுத்தாளரும் இணையத்தின் செயலாளருமான திரு ஆர்.. என் லோகேந்திரலிங்கம், எழுத்தாளர் இணையத்தின் உப – தலைவரும் எழுத்தாளருமான கலாநிதி; இ. பாலசுந்தரம் ஆகியோர் வாசித்து இறுதியாக இன்;று காலை பரிசுக்குரிய சிறுகதைகளை தெரிவு செய்தனர்.
பரிசு பெற்ற எழுத்தாளர்களின் பெயர்கள், அவர்கள் வாழும் நாடுகள் மற்றும் பரிசுத் தொகை பற்றிய விபரங்கள் நாளை சமூக ஊடகங்கள் மூலமாக அறிவி;க்கப்படும். தொடர்ந்து இலங்கை இந்திய வெளிநாடுகளில் உள்ள தமிழ்ப் பத்திரிகைகள் ஆகியவற்றில் பிரசுரமாகும்.

முதலாவது பரிசு பெறம் சிறுகதைக்கு இலங்கைப் பணத்தில் 50,000 ரூபாவும்,

இரண்டாவது பரிசு பெறம் சிறுகதைக்கு இலங்கைப் பணத்தில் 30,000 ரூபாவும்

மூன்றாவது பரிசு பெறம் சிறுகதைக்கு இலங்கைப் பணத்தில் 20,000 ரூபாவும்

பாராட்டுப் பரிசு பெறம் ஏழு சிறுகதைகளுக்கு இலங்கைப் பணத்தில் தலா 5000 ரூபாவும்பெறும்

ஊக்கப் பரிசு பெறும் ஐந்து சிறுகதைகளுக்கு இலங்கைப் பணத்தில் தலா 3000 ரூபாவும்

வழங்கப்பெறும்.

இந்தப் சிறுகதைப் போட்டியில் கனடா எழுத்தாளர் இணையம் வழங்கவுள்ள மொத்த பரிசுத் தொகை இலங்கைப் பணமாக ஒன்றரை இலட்சம் ரூபாய்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கே காணப்படும் படங்களில் எழுத்தாளரும் இணையத்தின் பொருளாளருமாக திரு க. ரவீந்திரநாதன், எழுத்தாளரும் இணையத்தின் செயற்குழு உறுப்பினருமான திருமதி சிவநயனி முகுந்தன், எழுத்தாளர் இணையத்தின் தலைவரும் எழுத்தாளருமான திரு குரு அரவிந்தன், மற்றும் எழுத்தாளரும் இணையத்தின் செயலாளருமான திரு ஆர்.. என் லோகேந்திரலிங்கம், மற்றும் எழுத்தாளர் இணையத்தின் நிர்வாகசபை அங்கத்தவரும் எழுத்தாளருமான திரு சிவநாயகமூர்த்தி ஆகியோர் சிறுகதைகளை இறுதியாக வாசித்து பரிசுக்குரிய சிறுகதைகளை தெரிவு செய்வதைக் காணலாம்..

ஆர். என். லோகேந்திரலிங்;கம்- செயலாளர் – கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்