கருணை.



வானத்தில்
அடை மழை
தரையில்
கருணை மழை.
மனத்தில்
இரக்கம் சுரந்தால்
வையமும்
தானே தளைக்கும்.
உழைப்பாளிகளின்
எண்ணங்கள் வெறும்
பணத்தோடு மட்டும்
நின்றுவிடுவதில்லை.
கடமை கண்ணியம்
கட்டுப்பாடு
நம்பிக்கை நாணயம்
பாது காப்பு உட்பட..
பெண்மையின்
தாய்மையின் செயல்.
பிரியம் நேயம்
நிறைந்த பொக்கிசம்..
கண்டதும்
கை எடுத்து
கும்பிட வைக்கும்
பண்புக்குள் இருக்கும்
வரை பெண்மையின்
போற்றுதல் தொடரும்.

ஆக்கம் கவியர் ரி.தயாநிதி