கலாமித்ரா விருதினை தனதாக்கிய வடமராட்சி பெண்மணி வி.சரண்யா



கொழும்பு மாநகரில் வடமராட்சி கலை பண்பாட்டுக் கழக ஸ்தாபகர் திருமதி விசிந்தன் சரண்யா அவர்களுக்கு இரண்டாவது விருதாக கலாமித்ரா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது
புதிய அலை கலை வட்ட 45 வது ஆண்டு நிறைவும் கலாமித்ரா விருது விழாவும் நேற்று 29.01.2023 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6.மணிக்கு கொழும்பு தாமரைக்கோபுர வளாகத்தில் இடம்பெற்றிருந்தது

பெண்ணியல் வரலாற்றில் சிறுவயது தொடக்கம் இன்று வரை தமிழர் பாரம்பரிய கலை பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருவது மட்டுமல்லாது வடமராட்சி கலை பண்பாட்டுக் கழக ஸ்தாபகரும் அமைப்பாளருமாகிய விளங்கி வடமராட்சியில் பல மாணவர்களுக்கு கலைகளை போதித்து வருகின்ற நிலையில் புதிய அலை கலை வட்டம்
குழுவினரினால் கலாமித்ரா விருது வழங்கப்பட்டது
வடமராட்சி கலை பண்பாட்டுக் கழகம் ஸ்தாபகர் திருமதி விசிந்தன் சரண்யா அவர்களுக்கான கலாமித்ரா விருதினை புதிய அலைகலை வட்ட ஸ்தாபகர் கலைஞர் பத்மிதா அவர்களும் இலக்கிய வல்லல் உலக புரவலர் ஹாஷீம் உமர் மற்றும் அலை கலை வட்ட கலை வல்லுனர்கள் இணைந்து வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert