கலைஞன்.


கலை
என்பது ஒரு
பிரபஞ்ச பாஷை.
கலைஞன்
என்பவன் ஓர்
பிரபஞ்ச ஜீவி..
நேரத்தை
கரைப்பதற்கு
கதை சொல்பவன்
கலைஞனாகான்.
மக்களை
கரை சேர்ப்பதற்கு
கதை சொல்பவனே
கலைஞனாவான்.
கலை
என்பது இறை
பணிக்கு
ஒப்பானது…
நித்தமும்
தேடலும் செதுக்கலும்
கற்றலும் என
தன்னை கரைப்பவன்.
கரைபவன் கலைஞன்.
உள்ளம்
அழுதாலும்
உதட்டில் சிரிப்பினை
தாங்கி வாழ
நிற்பந்திக்கப்பட்டவன்.
கோமாளிகள்
கூத்தாடிகள்
என நகைப்போரும்
கலைஞன் என
ஏற்போருமுண்டு…
மதிப்போர்
மிதிப்போர்
ரசிப்போர் மனங்களை
அழகூட்டும்
இவர்களையும்
மதிப்போம்..