கலைஞர், கவிஞர், எழுத்தாளர்களை பாராட்டும் பெருவிழா14.10.2017

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் 14.10.2017 (சனிக்கிழமை) டோட்மூண்ட் மாநகரில் கலைஞர், கவிஞர், எழுத்தாளர்களை பாராட்டும் பெருவிழா சிறப்பாக அமைந்தது. மதிப்புக்குரியவர்களான கவிஞர் முகில்வாணன், வில்லிசை மன்னன் ஈழத்து நாச்சிமார்கோவில் இராஜன், எழுத்தாளர், கவிஞர் பசுபதிராஜா, நோர்வே எழுத்தாளர் ஜீவகுமாரன் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். உண்மையில் பாராட்டவேண்டியவர்களே. பாராட்டு நிகழ்வைவிட வாழ்த்துரை, ஏற்ப்புரை, சிறப்புரை ஆற்றிய அத்தனை உரைகளும் சிறப்பே வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் வாழும் போது வாழ்த்தப்பழகுவோமாக.