கலையாத எழில்..!

ஓவியத்துக்கு
ஒப்பனை எதுக்கு?
காவியத்துக்கு
கற்பனை எதுக்கு?
மருகிடும் இயற்கை
அருகிடும் அழகு
காணாமல் போனதா!
காலாவதியானதா?
அன்று கண்ட
அதே நிலா
இன்று கண்டதும்
வணங்கிட
வைக்குது வனப்பு.
இதுவல்லோ
இவளுக்கு சிறப்பு
பூந்தோட்டதில்
நின்றால் இவளும்
பூவாகிடுவாள்
வண்டுகளும்
குளம்பிடும்.
பூவா! பூவையா!
இயற்கையின்
எழில் என்நாளும்
எல்லோர்க்கும்
இனிதான ஈர்ப்பு.!
வியாபார தந்திரம்
மந்திரம் போட்டு
இழுப்பதினால்
மங்கையர் மனங்களில்
போராட்டம்..
காவியங்கள்
இதிகாசங்கள்
காத்து வந்த
நாகரீகங்கள்
நலன் கெடல்
அவசியம் தானோ.!