கவிச்சாகரம் விருது பெற்றார் வேலணையூர் ரஜிந்தன்.

இந்தியாவின் மதுரை திருமங்கலத்தில் 20.05.2018 ஞாயிறு அன்று சங்கதமிழ் கவிதைப்பூங்காவின் முதலாம் ஆண்டுவிழா நடைபெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த கவிஞர் வேலணையூர் ரஜிந்தன் அவர்களுக்கு கவிச்சாகரம் விருது வழங்கப்பட்டது.

அத்துடன் கடந்த 06.05.2018 ஞாயிறு அன்று இந்தியாவின் உலகத்தமிழாராய்ச்சி மையத்தில்
தென்சென்னை மக்கள்நல அறக்கட்டளையின் முப்பெரும் விழாவில் ஒன்றான டாக்டர் ஜீவாவின் கவிதைப் பூங்காவின் இரண்டாம் ஆண்டு விழாவிலும் வேலணையூர் ரஜிந்தனுக்கு திரைப்படப் பாடலாசிரியர் உயர்திரு கவிஞர் விவேகா அவர்களால் கவிச்சரம் விருதும் வழங்கிவைக்கப்பட்டது.