கவிச்சோலை பாகம் (8) தந்த கவிஞர்களுக்கு கவிஞர் முகில்வாணன் அவர்கள் புகளாரம்

இன்றைய
பாட்டரங்கத்தாமரையில்
வீற்றிருந்த பாவலர்கள்
நான்கு பேரும்
மீட்டிய
நற்றமிழ் இன்பத்தைக்
கேட்கக் கேட்க
எந்தன்
காதினித்தது ,
நாவினித்தது.
நெஞ்சினித்தது,
நினைவினித்தது.

வித்துவமும், தத்துவமும் ,
வேக நடை போட்டதுபோல்
நான்கு பெரும் கவிஞர்களும்
சந்தத் தமிழ் எடுத்துச்
சங்கீதம் பாடிப்போனார்கள்.
சங்கத் தமிழ் அணிந்து
சலங்கைகட்டி
ஆடிப்போனார்கள்.
மொத்தத்தில் இன்றைய
இன்பத் தமிழ் அரங்கு
இனிப்புத்தான்.
பாவலர் நால்வருக்கும்
என் பாராட்டுக்கள்.