கவிஞை :சுதந்தினி.தேவராசா அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து(13.11.18)

இவர் கவிஞரும்இணையங்களின் நிர்வாகியும்  பாடகரும் ஆவர் ஜெர்மனி கம் அம்மன் ஆலைய முதல் பக்திப்பாமாலையில் குழுப்பாடகராக ஆரம்பித்து பின் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இசையமைப்பில் என்.வி.சிவநேன் வரிகளில் உருவான புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையிலும் பாடலைப்பாடியவரும்கூட இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

அதுமட்டுமல்ல இவர் எழுதிய பத்திப்பாடல்களும் இசைப்பேளைகளாகவும் வெளிவந்துள்ளது. அத்தோடு இணையங்களில் இவர் எழுதிய கவிதைகள் வெளிவந்தது. மேலும் கலைஞர்கள் இணையமான S.T.S இணையநிர்வாகியில் ஒருவரான சுதந்தினி.தேவராசா அவர்களை அவர்சிறப்புக்காய், இன்னும் செய்ய உள்ள பல பணிக்காய், புதிய படைப்புக்களுக்காய், இன் நாளில் வாழ்த்துவோம்.

ஈழதுக்கலைஞர்களின் படைப்புக்களுக்கு படிக்கல்லாகவும் சிறுப்பிட்டி கிராமத்து ஒன்றுபட்ட முன்னேற்றத்துக்கு பணி புரியும் ஒன்றிய நிர்வாகங்களிலும் பணி புரிந்து வரும் திரு.தேவராசா அவர்களுக்கு பணிவிடை செய்வது மட்டுமன்றி பக்க பலமாக இருந்துவரும் திருமதி சுதந்தினி.தேவராசா அவர்களுக்கு ஊர்வாழ் உலகவாழ் சிறுப்பிட்டி உறவுகள் சார்பாகவும் கலைஞர்கள் சார்பாகும் சிறுப்பிட்டி மேற்கு ஒன்றியம் மற்றும் சிறுப்பிட்டி உலகதமிழர் ஒன்றியம் ஊர் இணையயங்கள் சார்பாகவும் எமது வாழ்த்துக்களை பதிவு செய்கின்றோம்