கவிதையா கேட்கிறாய்?கவிதை கவிஞர் ரதிமோகன்

கவிதையா கேட்கிறாய் உயிரே
களவாடிய இதயத்தை திருப்பித்தா
கேட்டு சொல்கிறேன்..

அங்கேதானே ஒளித்து வைத்தேன்
அடுக்கடுக்காய் நீ பேசிய வார்த்தைகளை….

அங்கேதானே பொத்தி வைத்தேன்
நீ சிந்திய புன்னகையை..

அங்கேதானே பதித்து வைத்தேன்
அனல் பறக்கும் உன் கோபத்தை..,

எடுத்து தருகிறேன் இவற்றை கோர்த்து
எழில் மிகு கவிதையாக …

நீதானே என் கவிதையென்று
புரியாதவனா நீ..

ஆக்கம் ரதிமோகன்