காதல் கண்ணைமறைக்கும்
பெற்றவரை மறக்கும்
சொந்தங்களைத்துறக்கும்
பாசத்தை மறக்கும்
உன்னையே மறைக்கும்
நித்திரையை மறக்கும்
இனிக்கும் புல்லரிக்கும்
இனம்புரியாத இளவயசு
ஒன்றைமட்டுமே பார்க்கும்
இவையாவும் வீண்என்று
காலங்கடந்து புரியும்
மனைவியைக்காதலியுங்கள்
பெற்றவர்களைக்காதலியுங்கள்
பிள்ளைகளைக்காதலியுங்கள்
மண்ணைக்காதலியுங்கள்
காதலித்தால் காதலியை
தினமும் காதலியுங்கள்
இதுவே காதலர் தினம்
தினமும் காதலிப்பதே
காதலர்தினம் ஆகும்
>மயிலங்காடு இந்திரன் >