காதலி!கவிதை கவிஞர் தயாநிதி

பிறப்போடு
வருவது
காதல்..
இறப்போடும்
அழியாதது
காதல்..
ஆதலால்
காதலி….

காதல்
கனதியானது
காதல்
உறுதியானது
காதல்
உண்மையானது.
ஆதலால்
காதலி.

காதல்
உருவமில்லாதது.
காதல்
உயிருள்ளது
காதலுக்கு
அழகிய மொழி
மௌனம்.
காதல் அழகானது.
ஆதலால்
காதலி..

ஊர்வன
பறப்பன
நீந்துவன
நடப்பன என்பன
எல்லாமே
காதலிப்பன.
ஆதலால்
காதலி..

காதலுக்கு
எல்லைகள்
ஏதுமில்லை
எங்கும் எப்போதும்
தோன்றக் கூடியது
மனங்கள்
பேசும் வல்லமை
காதலில்
ஆதலால்
காதலி…
வாழ்வைக்
காதலி
வையம்
உள்ள வரை
காதலி.

ஆக்கம் கவிஞர்தயாநிதி