காதல் படி.கவிஞர் தயாநிதி

எப்படி
இப்படி
என்றெனக்கு
தெரியாது.
ஆனாலும்
இப்படி
அப்படியாகி
போச்சடி..

சொற் படி
கேட்பதும்
அதன் படி
நடப்பதும்
காதலில்
முதல் படி
கட்டி முடித்தால்
தேன் கூடு.

அப்பிடி
இப்பிடியானாலும்
மனப்படி
தாண்டாது
காதலின்
மெய்ப் படி
அதனால்
காதலைப் படி.

கவிதைக்கு
கருப்படி
உயிருக்கு
உருப்படி.
கவிஞனா
காதலனா
அதை உணரப்
படி.அதுவே
வாழ்க்கைப் படி.

நினைத்தாலே
கொட்டுவது
கவிதையாகுதடி.
காதல்
பயிருக்கு
மழையாய்
அன்பை பொழி
நிஜப் படி.

ஆக்கம் கவிஞர்தயாநிதி