சந்திர வதனம்
தாங்கிய நதியே !
மந்திரப் பார்வையில்
மயக்கிய ரதியே !
சுந்தரி நடந்தால்
கங்கையின் நெளிவே !
கண்களைக் கவரும்
அந்தி நேர மலரே !
பூவிதழ் விரித்து
பூத்தது புன்னகையே !
பாத்ததும் பதறிப்
போனதென் மனதே !
சிந்தனை சறுக்கி
நிகழ்ந்தது விபத்தே !
_____________காதல் விபத்தே!!