காதல் விபத்து

சந்திர வதனம்
தாங்கிய நதியே !

மந்திரப் பார்வையில்
மயக்கிய ரதியே !

சுந்தரி நடந்தால்
கங்கையின் நெளிவே !

கண்களைக் கவரும்
அந்தி நேர மலரே !

பூவிதழ் விரித்து
பூத்தது புன்னகையே !

பாத்ததும் பதறிப்
போனதென் மனதே !

சிந்தனை சறுக்கி
நிகழ்ந்தது விபத்தே !

_____________காதல் விபத்தே!!

– வேலணையூர் ரஜிந்தன்.