காத்திருந்து!

எதற்கு சிறையிட்டார்கள்!
விழித்துக் கொண்டு
இருக்கும் போது
கற்பினை களவாடவா!

காத்திருந்து பல
சோதனைகள் வந்து
சேர்ந்ததுதான் மிச்சம்,
எச்சங்கலாய் உருவெடுத்த
மானிடங்கள் நடுவில்!

சிறையிட்ட என்னை
மனம் உண்டு
நினைக்கவில்லையோ இந்த
கட்டையாய் பிறந்த
மானிடத்துக்கு!

சிறைகிடந்து சீரழிந்து
போய் உள்ளேன்,
சீதையாய் அல்ல
சிற்பமாய்!

பொத்துவில் அஜ்மல்கான்