காத்திருப்பு கவிஞர் தயாநிதி

இடை வெளி
நீளலாம்.
நினைவுகள்
மாளாது..

கனவுகள்
கலையலாம்
உணர்வுகள்
தாளாது.

இமைகள்
மூடலாம்
இதயம் உறங்க
நினைக்காது.

காத்திருப்பு
காதலுக்கு
கை விளக்கு
கை கூடும்
வரை
பூத்திருக்கும்..

கரும்பு கட்டோடு
உன் இனிய
நினைவுகளும்
கூட்டோடு..

வாசலிலே
வரவேற்பு
வாய் நிறைய
புன் சிரிப்பு
வாழ்வினிலே
பரபரப்பு..
வந்து விட்டால்
கலகலப்பு.

ஆக்கம் கவிஞர்தயாநிதி