காந்தக் குரலோன் திரு.கணேஸ் அவர்களின் தயாரிப்பில், ஹம் ஆலயப்பக்திப்பாமாலை

ஹம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் பப்திப்பாமாலை 2009 வெளியிடப்பட்டது,அதன் ஒளிப்பதிவை உங்களுக்காக தருகிறோம்,
இந்த இசைப்பேழை ஆனது திரு திருமதி தர்சினி.கணேஸ் தம்பதியினரால் தயாரிக்கப்பட்டு, ஹம் ஆலயப் பணிகளுக்காக தர்சினி.கணேஸ் தம்பதியினரால் அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டது, மிகுந்த ஆன்மீக ஈடுபாடுள்ள காந்தக்குரலோன் கணேஸ் அவர்கள் மனிதர்களை மதிக்கும் நற்குணம் உள்ள ஓர் கலைஞன் இவர் பாடி வெளிவந்த இந்த இசைப்பேளை பலரின் பாராட்டைப் பெற்றதாகும் இவருடன் குழுபாடகர்களாக சுதேதிகா.தேவராசா, தேவிதா.தேவராசா,
தேனுகா.தேவராசா,தேவதி.தேவராசா, ஆகியோர்பாடியுள்ளார்கள் இதற்க்கான இசையை இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்கள் இசையமைத்து, பாடல்வரிகளையும் எழுதியுள்ளார், இந்த இசைப்பேழை ஊருவான விதம் மிக
சுவையானது திரு.கணேஸ் எஸ்.ரி.எஸ். கலையகத்துக்கு வருகைதந்தார் உண்மையிலேயே இவர் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவர்களின் உறவினர்கூட ஆனால் இசைத்துறையில் எஸ்.தேவராசா பணியாற்றுவது கணேஸ் அவர்களுக்குத்தெரியாது முதல் முறையாக வீட்டின் மேல் மாடியில் அமைந்துள்ள எஸ்.ரி.எஸ். கலையகத்துக்குள் வந்து பார்த்து விட்டு நீங்கள் இசையமைப்பீர்களா? என்று ஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு தான் பாடுவேன் ஹம் ஸ்ரீ காமாட்சி தனது இஸ்டதெய்வம் அந்த ஆலயத்துக்கு ஒரு இசைப்பேழை செய்ய
ஆசைப்படுவதாக சொல்ல உருவான இசைப்பேழை சரியாக 23 மூன்று நாட்களில் உருவானதும் கூட அவர் கலைப்பணிதொடர எங்கள்வாழ்த்துக்கள்,ஆனைக்கோட்டை இணைளமும் தனது வாழ்த்துக்களை பகிந்து கொள்கிறது