காரணம் தேடுகின்றாயா

வயக்கடும் உடல் அமைப்பு
தெளிவு இல்லை
இடையில் காலன் தின்னும் சரீரம்
விழிப்பு இல்லை
பட்டென சாகும் மனிதம்
விடை இல்லை
இயற்கையை வெறுத்தால்
முடிவு இல்லை
செயற்கையை தின்னுவதால்
வாழ்வும் இல்லை
ம்ம்ம் காரணம் இது தான்
உன் சாவை நிர்ணயிக்கும் சாவி
கிருமி நாசினிதான் அவதானம்
இயற்கை விவசாயத்தில் இன்புறு
பொழுது விடியும் வாழ்வும் மலரும்

தே.பிரியன்