கார்த்திகைப் பூ.!கவிஞர் தயாநிதி

ஈழ தேசத்தின்
தேசியப் பூ.
ஈழ விடியலுக்காய்
உயிர் நீத்த மாவீர
மணிகளின்
அடையாளப் பூ.

கார்த்திகை 27இல்
தமிழர் வாழும் முழு
உலகப் பரப்பிலும்
அவர்கள் கரங்களில்
தவழும் உயிர்ப் பூ..

மாவீரர் பாதங்களின்
சமரப்பணத்துக்காகவே
வருடத்தில் ஒரு முறை
கார்த்திகையில் மலரும்
உன்னதப் பூ..
வணக்கத்துக்கு உரிய பூ.

தமிழர் இதயங்களிலும்
இணையத் தளங்களிலும்
பதியமாகி பாரெங்கும்
மாவீரரை நினைவில்
நிறுத்தும் புனிதப் பூ..
இன்று10.11.2017இல்
நவீனமயத் தொலைபேசியில்
ஆவணமாகிய தேசியப்பூ
சாதணைப் பூவினை போற்றுவோம்.