கார்த்திகை மலர்கள்

மண்ணில் விழும்
மழைத்துளிகளுக்குத் தெரியும்
மாவீரர் துயிலும் இல்லங்களை
உன்னில் ஒரு துளி
ஈரமிருந்தால்
ஈழத் தமிழனென
ஒரு நிமிடம் அவர்களை
எண்ணி மௌனித்திரு தமிழா
கார்த்திகை மலர்கள்
காலத்தை உணர்ந்து
தானாய் தன் நிறங்களை
காட்டி வீரரை எண்ணி விரியும்

அருள் நிலா வாசன்