„கிளிக்கோடு“ ஈழத்தின் தாய்மொழியின் சாயல் கூட மாறா எங்க ஊர் சினிமா!

கிளிக்கோடு ஆடம்பர அலட்டல் இல்லாமல் கதையை மட்டும் நம்பி எங்க ஊர் சினிமா இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஊர் அருமை பெருமையும் சேர்த்து ஈழத்தின் தாய்மொழியின் சாயல் கூட மாறாமல் படம் பார்க்கும் ஒவ்வொரு ஈழ நெஞ்சத்திலும் நானும் இப்படித்தான் இருந்தேன் எங்கள் ஊரில் என்று நெகிழ்ச்சியை உருவாக்கும் எம் மண்ணின் பெருமை தான் இந்த காவியம்.

பாதி படம் முடிவடைந்திருக்கும் இவ் தருணத்தில் நேற்றைய தினம் பணத்தேவையின் பற்றாக்குறை கொஞ்சமாக தீர்ந்து படமாக்கபட்டது ஒரு சண்டைகாட்சி. தயாரிப்பு தரப்பில் உதவி செய்துகொண்டிருக்கும் வெளிநாடுவாழ் உறவுகளுக்கும்.இது தான் என்னோட ஆளுமை என்றும் நான் இப்படித்தான் படம் பண்ணுவேன் என்றும் பல நல்ல குறும்படங்களை இயக்கிய இப் படைப்பின் இயக்குநர் யசிதரன் அண்ணாவிற்கும்.
இப்படம் முழுமையாக முடிவடைய நேற்றைய தினம் கைகோர்த்த நல்உள்ளம் கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் படக்குழு சார்பாக.