கிளையில்லாத வானம்!கவிதை ஜெசுதா யோ

கிளையில்லாத
வானம்
உட்கார இடமில்லாது பறவை
பறக்கும் தூரம் அதிகம்
பாதிவழியில்
இறகுகள் இழந்து
பிறந்த மேனியாய்
இயலாமையில்
பயம் தொற்றிக்கொள்ள
இறப்புத் தான் இனியென்று
எண்ணிய போது..

பறந்து போன
பருந்தைக் கண்டு
பாதியுயிர் மீண்டிட
உதவிகேட்டது..

ஐயோ பாவம்
உயிருக்கு பயந்த
பறவை அறியவில்லையே
பருந்துக்கு நான் தான்
இரையென்பதை…!!

_  ஆக்கம் ஜெசுதா யோ