குருவிக் கூடு!கவிதை ஜெசுதா யோ

குருவிக் கூடாயினும்
குதுகலமான வாழ்க்கை
மாடி வீடு வந்ததும்
மாண்டு போனதே
சந்தோசமெல்லாம்

அளவான பணம் இருந்தபோது
ஆழமான அன்பிருந்ததே – இன்றோ
அளவுகடந்து பணம் வந்தபோது
அன்பும் ஆழமின்றிப் போனதே…

ஒருநாள் பிரிகையில்
உடன்பிறந்தவர்களை
உள்ளம் நொந்தது அன்று..
இன்று நாடு விட்டு வந்த போதும் அனாகரிகமாகிப் போனது அருகிருத்தல்..

ஆயிரம் தான் வந்தாலும்
உறவுகள் தான்
உயிர் கொடுப்பர் என்பதை
மறந்து போனது
மரத்துப் போன இதயம் இங்கே….

ஆக்கம் ஜெசுதா யோ