கொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா


கொடிகாமத்தில் A9 பிரதான வீதியில் (புகையிரத நிலையத்திற்கு அண்மையில்) நட்சத்திர மஹால் என்ற திருமண மண்டபம் இன்று 25.08.2019 காலை திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி சங்கத்தானை சேர்ந்த த.பரமானந்தம் தம்பதியர் கொடிகாமத்தில் 1000 பேருக்கான இருக்கை வசதிகளுடன்கூடிய மணிமண்டபத்தை உருவாக்கியுள்ளார்

மண்டபத் திறப்பு விழாவில் பெரும் எண்ணிக்கையானவர்கள் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் யாழ் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க. கந்தசாமி முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் டிறிபேர்க் கல்லூரி முன்னாள் அதிபர் திரு க.அருந்தவபாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

நிகழ்வில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் ச.லலீசன் வாழ்த்துரை வழங்கினார்.

நாதஸ்வரக் கலைஞர்களான சித்தார்த்தன் பிரதித்தன் குழுவினரின் இசைச் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பு நிகழ்வாக இடம்பெற்றது.

மண்டபத்தில் இடம்பெறும் முதலாவது திருமண நிகழ்வாக நாதஸ்வர கலைஞர் வி. பிரதித்தனுக்கான திருமண நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி நடைபெற உள்ளது.

நிகழ்வில் மண்டப உரிமையாளர் பரமானந்தம் தம்பதியர் தென்மராட்சி மக்கள் சார்பில் கௌரவிக்கப்பட்டார் சாவகச்சேரி இந்துக் கல்லூரி முன்னாள் அதிபர் அ. கைலாயபிள்ளை தம்பதியர் இவர்களுக்கான கௌரவத்தை வழங்கினர்

நிகழ்வுகளை அதிபர் வை.விஜயகுமாரன். தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் க. உதயகுமார் ஆகியோர் நெறிப்படுத்தினர்.

மண்டபத்தின் முகாமை பொறுப்புகளை சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் பிரதி அதிபர் பாலசண்முகநாதன் ஏற்றுள்ளார்.