கொடுத்துப்பார்…..!..

நம்பிக் கை
பிடித்தவளுக்கு
நல்லவனாயிரு
நாணயமாயிரு
வல்லவனாயிரு.
வழித்துணையுடன்
வாழ்க்கைக்கும்
துணையாயிரு.!

மனதைக் கொடு
மனதைத் தொடு
மகிழ்வைக் கொடு
மதிப்புக் கொடு
தட்டிக் கொடு
விட்டுக் கொடு
நம்பிக்கை கொடு.!

உழைப்பைக் கொடு
உழைப்பை மதி
உண்மையைக் கொடு
உறுதியைக் கொடு
ஊக்கம் கொடு
வெற்றியில் பங்கெடு.!

குழப்பம் கலை
விளக்கமாயிரு
ஐயம் விரட்டு
மகிழ்வைத் திரட்டு
மனையாள் உன்
நினைவோடு
நிலைத்து நிற்பாள்…!

கவிஞர்.ஆக்கம் தயாநிதி