கொட்டுமழை நீ எனக்கு

அந்தி வானின் வண்ண முகிலே…
அழகு ததும்பும் அல்லி மலரே…
அன்ன நடை பயிலும் நிலவே…
அதிசய தேவதை நீ எனக்கு..!!

அடிமனதில் உந்தன் நினைவே…
அல்லும் பகலும் கனவும் நீயே…
அன்பின் உருவாக வந்த உறவே;
அத்தை மகள் நீ எனக்கு..!!

மழலைச் சிரிப்பில் மயக்கும் அழகே…
மாங்குயில் இசையே மரகத மயிலே…
மாந்தோப்பு அணிலாக தாவுது மனதே…
மறையாத வானவில் நீ எனக்கு..!!

கொஞ்சும் மழலை பேச்சழகே…
கொவ்வைப்பழ உதட்டழகே…
கோடைக்கால வெப்பத்திலே;
கொட்டும் மழை நீ எனக்கு..!!

வேலணையூர் ரஜிந்தன்.