கொண்டையில பூ

குளத்தங்கரையோரம்
கொலுவிருக்கும் கோலமயிலே – உன்
குடத்து இரண்டில் நீர் மொண்டு
கொடுக்க வாறேன் பொன்மயிலே…
கொண்டையில பூவும்
கெண்டையில சிலம்பும்
கமுக்கம் பண்ணுதடி – உன்
கணுக்கால் நீரில் பட
கொலுசொலியில் மீன்கள் – உன்ன
அமுக்க எண்ணுமடி..
கள்ளு போதைப் பார்வை
கடுகளவு போதும்
கரையொதுங்கிய நீரும்
காதல் கொள்ள தோணும்
கொடமொளகா இடை தழுவும்
உன் குடம் வரமோ..
கொலவெறியில் தவங்கிடக்கேன்
உனை மணக்க ஒரு வரம் கொடுமோ…

கவித்தென்றல் ஏரூர்