கோடையை குளிர்விக்க…..

பசுமைத் தீவனம்
கொட்டிக் கிடக்க
கட்டி வளர்க்காமல் சுற்றித்திரியும்
சுதந்திர மிருகங்களுக்கும்
இனிய கோடைகாலம்…..

இறக்கைகளை தளர்த்தி
ஈரப்படுத்த விசிறியடிக்கிறது பறவைகள் இவைகளுக்கும்
வியர்க்கிறதோ புரியவில்லை !!

கட்டெறும்புகள்
கூட்டங்கூட்டமாய் ஊர்ந்து கல்லுக்கடியில்
பதுங்கிக் கிடக்கிறது

கோடையை குளுமைப் படுத்தி
குதூகலிக்க
மனிதர்கள் மட்டுமா
உயிரினம் எல்லாமே தயாராகிறது……..

சுபாரஞ்சன்