கோப்பாய் பிரதேச பண்பாட்டு விழா நடைபெற்றது.

வலிகாமம் கிழக்கு பண்பாட்டுப் பேரவை, கோப்பாய் பிரதேச செயலகம், வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுத்த பண்பாட்டு விழா 22.12.2017 மாலை ஆவரங்கால் ஆதவன் மண்டபத்தில் பேரவையின் பதவிவழித் தலைவரும் பிரதேச செயலருமாகிய சுபாஜினி மதியழகன் தலைமையில் கலாபூஷணம் வே.இளையகுட்டி அரங்கில் நடைபெற்றது.
.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக சங்கானை பிரதேச செயலர் பிறேமினி பொன்னம்பலம், யாழ். பல்கலைக்கழக இந்துநாகரிகத்துறை தலைவர் கலாநிதி சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக முதலமைச்சர் விருதுபெற்ற கலைஞர்களாக நீர்வேலியூர் சிற்பத் திலகம் செ.விஸ்வலிங்கம், அச்சுவேலியூர் சங்கீதபூஷணம் வ.செல்லத்துரை ஆகியோரும் கலந்து கொண்டனர்.
.
கவிஞர் வே.இளையகுட்டியின் நினைவுகளைத் தாங்கிய அரங்கத் திறப்புரையை பண்பாட்டுப் பேரவையின் உபதலைவர் ச.லலீசன் மேற்கொண்டார்.
.
பேரவை செயலாளர் இ.ஜோன்சன் வரவேற்புரையையும் உபசெயலாளர் இ.மயில்வாகனம் நன்றியுரையையும் வழங்கினர்.
.
நிகழ்வின் போது நா.யோகேந்திரநாதன் (நீர்வேலி), ந.சிவசுப்பிரமணியம் (செட்டியார் – நீர்வேலி), இ.கனகரத்தினம் (கல்வியங்காடு), ஆ.மகாலிங்கம் (ஊரெழு), த.பரராசசிங்கம் (நீர்வேலி), சு.சண்முகம் (கோப்பாய்), இ.சுந்தரலிங்கம் (உரும்பிராய்), சி.இரத்தினசிங்கம் (அச்சுவேலி) ஆகிய எழுபது வயதிற்கு மேற்பட்ட கலைஞர்கள் செம்புலக்குரிசில் என்ற விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.