சண்முகராஜா சிவசிறீ அவர்களை உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பாக பாராட்டி வாழ்த்துகின்றோம்

தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியின் பழைய மாணவரும் , தெல்லிப்பளைப் பிரதேசசபைச் செயலாளருமான திரு.சண்முகராஜா சிவசிறீ அவர்கட்கு Ransprency international என்னும் நிறுவனத்தால் ஆளுமைமிக்க அரச சேவையாளனாகக் கௌரவ விருது வழங்கப்பட்டமை , யாழ் மண்ணிற்குக் கிடைத்த விருதாகும் . அவரின் நேர்மையான சேவையைப் பாராட்டி , எமது உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்வடைகிறோம் . திரு . சண்முகராஜா சிவசிறீ நல்வளங்களுடனும் , உடல்நலத்துடனும் வாழ்ந்து , மேன்மேலும் நற்சேவைகள் ஆற்ற வேண்டுமென வாழ்த்துகின்றோம் . மாவை.சோ.தங்கராஜா ( யேர்மனி ) ஸ்தாபகர் உலகத்தமிழ்ப் பண்பாட்டு மையம்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert