சதுரங்கம்…கவிதை கவிஞர்தயாநிதி

உறவின்
உயிர்ப்பிற்காய்
உழைப்புக்கள்
சேதமாகின்றன.

ஏங்கும்
உயிர்களின்
உள்ளுணர்வை
ஊரறிவதில்லை…

பாரில் பல
ரகங்களில்
பச்சோந்திகள்
சுய நல முகாம்களில்…

சதி பின்னும்
சத்தில்லா சதுரங்க
ஆட்டங்கள்
அரங்கேறுது..

உலகம்
சுருங்கியது போல்
உள்ளங்களும்
சுருங்கி உருவிழக்குது…

ஆக்கம் கவிஞர்தயாநிதி