சத்தியங்கள்..!கவிதை கவிஞர் தயாநிதி

 

அடிக்கடி
தலையில்
அடித்து
அம்மா
எனும்
உயிர்மெய்
எழுத்தினை
உச்சரித்து
பேச்சு வழக்கில்
அம்மாவாணை
சத்தியம் என
உரைத்த
காலங்கள்.

அம்மா
என்பது
அதி உன்னத
சக்தி
அவளை
விஞ்சிட
ஏதுமில்லை
எனும் தீராத
நம்பிக்கை…

அம்மா
சத்தியம்
என்றாலே
நீதி கிடைத்த
காலங்கள்
இப்போதெல்லாம்
இல்லாமல்
போனது.
மெய் மறைந்து
பொய்கள்
கோலோச்சிட
உலகம் உருளுது.

கீதையாகவும்
பைபிளாகவும்
திருக் குறானாகவும்
ஏடுகள் மீதும்
வேத ஆகமங்களில்
நம்பிக்கை
பற்றுக் கொண்டதால்
சத்தியங்களும்
செத்துப் போயின..
இது அம்மா மேல்
சத்தியம்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி