சந்தோஷங்கள்.!கவிதை கவிஞர் தயாநிதி

 

ஏழைகளையும்
இலகுவில்
இன்புற வைத்திடும்
சின்ன சின்ன
சந்தோஷங்கள்…

விஞ்ஞான
விளைச்சலில்
மொபைலின்
அறுவடையால்
சந்தோஷங்கள்…

பட்டி தொட்டி
எங்கனும்
படமெடுக்கும்
பரவசத்தால்
சந்தோஷங்கள்..

பாட்டி முதல்
பாட்டா வரை
செல்பிக்குள்
செல்லமாய்
குதூகலிக்கும்
சந்தோஷங்கள்…

குழந்தை முதல்
குமரி வரை
கையில் கண்டதும்
கிளிக் செய்யும்
சந்தோஷங்கள்..

தன் முகத்தை
தான் பார்த்து
மகிழ்வதையும்
தாண்டி தப்பான
தளங்களில்
தவறான தரையிறக்கத்தில்
கவனப் பிழைகள்
விபரீதமாவதில்
அவதானம் வேண்டும்..

ஆக்கம் கவிஞர்தயாநிதி