சாகித்ய சுருதிலயா இசைக்கல்லூரியின் 21ம் ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற்றது.

சாகித்ய சுருதிலயா இசைக்கல்லூரியின் 21ம் ஆண்டுவிழா 26.10.2019 அன்று கேர்ணிங் நகரில் சிறப்பாக நடைபெற்றது.
அமைதி வணக்கத்துடன் நிகழ்வுகள் மதியம் 12.30 அளவில் ஆரம்பமாகின. திருமதி. சச்சிதானந்தன், திருமதி. சோதிநாதன் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றினர். நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. ஆண்டுவிழா சிறப்பாக நடைபெற உதவிய (சமையல், ஒலி, ஒளி அமைப்பு, புகைப்படம், வீடியோ, மேடை, மண்டப ஒழுங்கு) மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர் திருமதி. குமுதினி பிறித்விராஜ் அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
குறிப்பாக நிகழ்ச்சிகள் முடியும்வரை இருந்து பாடல்கள் வழங்கிய மாணவர்களை உற்சாகப்படுத்திய மாணவர்களையும் பெற்றோர்களையும் மனதாரப்பாராட்டி தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.