சிட்டுக்குருவிகளே

துறு துறுக்கும் கண்கள் கண்டேன்
குட்டியான மென் அலகு கொண்டு
கொத்தி தின்னும் அழகை(இ) ரசித்தேன்
தாவித்தாவி விர் என பறக்கக்கண்டேன்..

ஆணும் பெண்ணும் சிறகு கோதி
கொஞ்சிப்பேசும் அழகில் மயங்கினேன்
சின்னஞ்சிறிய வயசிலே உங்க பின்னே
சுற்றிய நினைவுகள் மலரக் கண்டேன்..

காதலின் நெருக்கத்தை உங்களிடம்
கற்றுத்தானே தெளிந்து கொண்டேன்
கூட்டம் கூட்டமாய் சேர்ந்திருக்கும்
ஒற்றுமையை மானிடம் கற்க ஆசை கொண்டேன்..

உங்களுக்கென்று இன்று ஒருதினமாமே
எனையும் கூட்டிச் செல்லுங்கள் இல்லையேல் 
உங்கள் சிறகுகளை எனக்குத்தாருங்கள்
வானத்தை வீடாக்கிக்கொள்ள நெடுநாள் நான்
ஆசை கொண்டேன் …

ரதி மோகன்❤️