சிதைவு…!கவிதை கவிஞர் தயாநிதி

உயிர்ப் பலி
பாலியல்
கொடுைமை
வாலிபக்
கடத்தல்…

கண்முன்னே
கட்டவிழ்ந்த
அராஜகம்
கண்களை
மூடியும் மூடாமலும்
மௌனிகளானோம்..

பாதிக்கு மேல்
அழிந்து
மீதியில்
ஊனமுற்றோரும்
துணையிழந்தோரும்
பட்டியல்
நீண்டது…

மம்மி மாலு
வாங்க கடைக்கு
எனக் கலப்பு
தமிழ் பெருக
பெருமை கொள்வோர்.

இன்று
பெயர்ப் பலகை
பேரூந்து
என என் தமிழ்
சிதைவு
நீள்வது கண்டு
வலிக்குது…..

ஆனாலும்
சுணையின்றி
முகநூலில்
முத்தமிழ் காத்திட
அரும் பாடு
தமிங்கிலம்
தலை நிமிருது

யாழ்ப்பாணம்
சிதைவுற்று
ஓடித்திரியுது
காணமல் பயணிகள்
தானுண்டென
வாழ்வு நகருது….

ஆக்கம் கவிஞர்தயாநிதி