சிவபூஷணா இசைக்கலாலயா நிறுவனர் திருமதி ஞானாம்பாள் விஜயகுமார் அவர்கள் தன்மாணவர்களை இணைத்து நடத்திய வாணிவிழா 2022 !

திருமதி ஞானாம்பாள் விஜயகுமார் அவர்கள் தனது குரலிசை கற்பித்தலில் மூலம் பல மாணவிகளை புலத்தில் உருவாக்கி பரீட்சையில் சித்தியடைந்ததுடன்
சில வருடங்களாக வாணிவிழா கொண்டாடுவதுடன் குரலிசை கற்கும் பிள்ளைகளை இணைத்து பெற்றோர்கள் துணையுடன் சிறப்பாக கொண்டாடி அவரிடம் கற்ற பிள்ளைகளுக்காக தனிக்களம் அமைத்து அவர்களுக்கான ஆளுமையை காட்ட இடம் அளித்து வருகின்றார் .

இதில் பிள்ளைகள் தங்கள் தனித்துவத்தையும் குழுப்பாட்டுத்திறனையும் காட்டியதும் அளுமையுடன் அவர்கள் கலந்து கொண்டு நின்றதும் வாழ்த்துதலுக்கு உரியது.

தமிழர் அரங்கில் நுாற்றுக்கு மேற்பட்ட பார்வையாளர்களுடன் 02.10.2022 சிறப்பாக நடந்தேறிய வாணிவிழாவில் மாணவர்களுக்கான சாண்றிதழ்கள் வழங்கப்பட்டது அதே நேரம் மாணவர்கள் தமது குருவுக்கும் கௌரவம் வழங்கியதும் சிறப்பு,

அற்பணிப்புடன் மாணவர்களை உருவாக்கி இதுபோன்ற களத்தை ஏற்பாடு செய்த சங்கீத ஆசிரியர் திருமதி:ஞானாம்பாள் விஜயகுமார் அவர்களின் சிறப்பு தொடரவாழ்த்துக்கள்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert