சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குருக்களின் சித்திரைப் புத்தாண்டு விழாவுக்கான வாழ்த்து

ஶ்ரீகனக துர்க்கா அம்பாள் ஆலயம் சுவெற்றா ஜேர்மனி ! 14-05-2017
கடந்த 06-05-2017 சனிக்கிழமை Dortmund ல்மிகச்சிறப்பாக நடைபெற்ற ஆனைக்கோட்டை இணையம், எஸ்ரிஎஸ் ஸ்ரூடியோ, எம்எஸ் மீடியா ஆகியோர் இணைந்த சித்திரைப் புத்தாண்டுக் கலைமாலை நிகழ்வு
மாபெரும் விழாவாக  அமைந்ததை நான் பாராட்டுகிறேன்.

 

இதில் இளந்தலைமுறையினரின்; கலை ஆற்றல்களை வளர்த்துவிடும் நோக்கில் அவர்களின் கலை ஆற்றல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டமை பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அத்தோடு மட்டுமில்லாமல் பல் துறைச் சார்ந்த (எழுத்தாளர் கஞைர்கள் அறிவிப்பாளர்) என அன்றும் இன்றும் செயலாற்றிவரும் ஐவரை தெரிவு செய்தமை சிறப்பு

தன் சிறு வயதில் இருந்து தாயகத்திலும் ஜேர்மனியிலும் நாட்டுக்கூத்து கலைஞராகவும் அதுசார்ந்த எழுத்துத்துறையிலும், பாடகராகவும் இசையமைப்பாளராகவும் இருந்துவரும் பாசையூர் திரு. யேசுதாசன் அவர்களையும்,

25 ஆண்டுக்கு மேலாக, தாயகத்தில் நாடக எழுத்தாளராகவும் நடிகராகவும் இருந்தவரும், ஜேர்மனியில் ஏலையா சஞ்சிகை ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் நாடக நடிகராகவும்,இயக்குனராகவும், குறும்பட நடிகருமான ஏலையா க.முருகதாசன், பணிக்கும்

தனது பத்தென்பது வயதில் இருந்து இன்று வரை சிறந்த மேடைப் பேச்சாளராக, பட்டிமன்ற பேச்சாளராக தமிழாசிரியருமான திரு.பொ.சிறிஜீவகன் அவர்களையும்

யாழ் மணிக்குரல் அறிவிப்புத்துறையில் தனது சேவையை ஆரம்பித்து புலம்பெயர்ந்து ஜேர்மனிக்கு வந்ததன் பின்னரும் உலகத்தமிழ் வானொலி, ரிஆர்ரி றேடியோ தொலைக்காட்சி, ரிரிஎன், ஜிரிவி ஆகிய ஊடகங்களில் நாற்பத்தி மூன்று ஆண்டுகளாக தனது சேவையை ஆற்றி வருபவரும் கம்பீரமான குரலால் மேடை நிகழ்ச்சிகளை மெருகு ஊட்டுபவருமான திரு.முல்லை மோகன்அவர்களையும் ,

இசையமைப்பாளர் நாடகத்துறையிலும் விளையாட்டுத்துறையிலும் அதுகும் கிறிகேற் வேகப் பந்து வீச்சாளருமாக
நீண்ட பல ஆண்டுகளாக சேவையாற்றி வருபவருமான திரு.மறிய றொக்குடன் ஐவரின்; சேவைகளைப் பாராட்டி பட்டயம் வழங்கி  தன்னினம் சார்ந்த கலை, இலக்கியச் சமூகச் செயல்பாடுகளைச் செயதவர்களை இனங்கண்டு அவர்களுக்கு உரிய கௌரவத்தை கொடுத்து சபையோருக்கு இனங்காட்டி நின்ற விழா ஏற்பாட்டளரை பாராட்டுகிறேன்.

விழா நிகழ்ச்சிகளை திரு.முல்லை மோகன், திரு.செ.தேவராஜா, திருமதி.மலர் சிவநேசன், திரு. சீலன், திரு. வ.திலகேஸ்வரன், திரு.வசந்த் ஆகியோர் தொகுத்து வழங்கியிருந்ததும் சிறப்பு

வாழ்த்துக்குரியர்களையும் வாழ்தியவர்களையும் பேற்றி மகிழ்கிறேன்

இவர்கள் அனைவர்களையும் இந்த விழாவை முன்னிட்டு மதிப்பளிக்கப்பட்டதையிட்டு வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
வாழ்க வளமுடன் !
இவ்வண்ணம்
சிவஶ்ரீ ஜெயந்திநாதக்குருக்கள்
ஶ்ரீகனகதுர்க்காஅம்பாள் ஆலயம் சுவேற்றா ஜேர்மனி.